×

கேரளாவில் 3 நாட்களுக்கு பலத்த மழை 8 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. கேரளாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் முற்றிலுமாக மழை குறைந்த நிலையில், ஒரு வாரமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் அடுத்த 3 நாட்களுக்கு கேரளாவில் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று ஆலப்புழா, திருச்சூர், எர்ணாகுளம் உள்பட 8 மாவட்டங்களுக்கும், நாளை (9ம் தேதி) கோட்டயம், ஆலப்புழா, உள்பட 10 மாவட்டங்களுக்கும், 10ம் தேதி இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு உள்பட 6 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் 3 நாட்களுக்கு பலத்த மழை 8 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Kerala ,Thiruvananthapuram ,Central Meteorological Centre ,
× RELATED பெண்ணின் பலாத்கார வீடியோவை...